ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவது காலத்தின் தேவை என ஐ.தே.க தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கொழும்பில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் நலன் மையமாகக் கொண்ட ஆட்சி அமைக்க UNP மற்றும் SJB இணையும் என சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். காமினி திசாநாயக்க நினைவு நிகழ்ச்சியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந்த மனுக்கள் தலைமை நீதியரசர் ப்ரீதி பத்மன் சுரசேன தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்படுகின்றன.