யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மனித இதயத்திற்குள் மூளை போன்ற உள்ளூர் நரம்பு மண்டலம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதயத் துடிப்பை கட்டுப்படுத்தும் இந்த அமைப்பு எதிர்கால மருத்துவ சிகிச்சைகளுக்கு புதிய வழிகளைத் திறக்கலாம்.
இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு 55,406 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 32 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.