இலங்கையின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜரானபோது கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ வெற்றி தின ஒத்திகை நிகழ்வுக்கு தடையுண்டாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் பட்டானிச்சூர் பகுதியில் லொறி மோதி துவிச்சக்கரவண்டி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய சாரதியை பொலிஸார் தேடி வருகின்றனர்.
நிலவும் கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
குருநாகல் - கல்கமுவ, வேவரனவெடிய பகுதியில் காட்டு யானை அதன் குட்டியுடன் குழிக்குள் வீழ்ந்து கிடந்துள்ளது.