மேற்காசிய பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 92,700 டன் LPG ஏற்றிய ‘நந்தாதேவி’ சரக்கு கப்பல் இந்தியாவை வந்தடைந்தது. ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் கப்பல் பாதுகாப்பாக தங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத்திற்கு சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்மூஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.