இன்று முதல் அடுத்த சில நாட்களில் இலங்கையின் பல மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று 5 பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக இன்று (6) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பதிவாகக்கூடும்.