பணியின் போது ஒரு பக்க சுவரை இடித்துவிட்டு அது சரியும் நிலையில் இருந்ததால் தப்பிக்க அறையின் உள்ளே ஓடியுள்ளார். அந்தச் சமயத்தில் மற்றொரு சுவர் அவர் மீது இடிந்து விழுந்ததில், குறித்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவின் கேப்பாபுலவில் இராணுவத்தால் நடத்தப்படும் சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு கரைத்துறைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது. உள்ளூர்வாசிகளின் முறைப்பாட்டை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் இந்த செயலை பிரதேச சபை தவிசாளர் வன்மையாக கண்டித்துள்ளார்.
இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப் புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று (27) மாலை இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் 8 பாடசாலைகளுக்கு இன்று(19) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பில் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தரப்புகளுடன் நானும் இணைகிறேன். உண்மை கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
குருந்தூர்மலை வழக்கில் நான் வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய மனித புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், குறைந்தது மேலும் இரண்டு உடல்களின் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாங்குளத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் ஒரு சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
போரில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் அண்மையில் வெளிப்பட்ட வெகுஜன புதைகுழி பற்றிய விசாரணைக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிதி கிடைக்காமையால் அகழ்வு பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
2000ஆம் ஆண்டு கைவேலியில் வீடுகளைப் பெற்ற 45 குடும்பங்களில் பல குடும்பங்கள் வேறு பகுதிகளில் வீடுகளை அமைத்து குடியேறியுள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் மூவரை திங்கட்கிழமை (19) அதிகாலை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.