இந்தப் பகுதிகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதுடன், கடல் அலைகளும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய படகுகளில் கடலுக்குச் செல்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.