பரீட்சை மண்டபத்துக்குள் கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.