சக்திவாய்ந்த எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களில் அடுத்த ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளக்கூடும் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.
எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடும் மழை மற்றும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டு, பெரு நாட்டின் 40% மாவட்டங்களில் அரசு 60 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.