இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குருவிட்ட சிறைச்சாலையில் நேற்றிரவு (06) ஆரம்பமான அமைதியின்மை இன்று காலை (07) மீண்டும் தலைதூக்கியது. இதில் இரண்டு சிறைக்கைதிகள் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குருவிட்ட சிறைச்சாலையில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கைதிகளின் அமைதியின்மையின்போது சிறை வைத்தியசாலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.