முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இரண்டு அரச பதவிகளுக்கான சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜூலை 1 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, அவரது வெளிநாட்டு பயிற்சிக்காக சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.