ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் இனி பின்வாங்க வழியே இருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் முக்கியக் கடற்படைத் தளபதி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய அரசின் வேண்டுகோளை ஏற்று, அந்நாட்டின் எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான ராணுவத் தாக்குதல்களை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியின் தடையற்ற அதிகாரம் கொண்டவர் என்று கருதப்படும் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரசா தங்சிரி, மார்ச் 26 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
26 நாட்களாக நீடிக்கும் போருக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு $2 மில்லியன் (சுமார் ரூ. 17 கோடி) வரை கட்டணம் வசூலிக்கும் புதிய சட்ட மசோதாவை ஈரான் தயாரித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் கிட்டத்தட்ட 90% ஆசிய நாடுகளுக்கே செல்கிறது என்பதால், ஆசிய நாடுகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை இன்று 11-வது நாளாக தொடர்கிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
அமெரிக்க படையினர், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் எங்கு உள்ளன, அவை எவ்வாறு நகர்கின்றன என்பதற்கான தகவல்களை ரஷ்யா ஈரானுடன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
ஒரு ஆட்சியைக் கவிழ்த்த பிறகு, அங்கு நிலையான ஒரு மாற்றைக் கொண்டு வராமல் இருப்பது மீண்டும் பழைய நிலைக்கே அந்த நாட்டை இட்டுச்செல்லும் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளிடையே நிலவுகிறது.