இந்தச் சம்பவம், ஏற்கெனவே பதற்றம் நிலவி வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கைகள் ஒரு தவறான முடிவு என்றும், இதற்காக அந்த நாடு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) எச்சரித்துள்ளார்.
உலகம் தற்போது மிக பதட்டமான காலகட்டத்தில் உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டு தாக்குதல்கள் நடந்த பின்னர், ஈரான் பதிலடி கொடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளது.
வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெளியே மிகுந்த ஆபத்து உள்ளது. குண்டுகள் எங்கு வேண்டுமானாலும் விழக்கூடும். அனைத்தும் முடிந்த பின், உங்களுக்கான அரசை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.