நாட்டில் தொடரும் கனமழை காரணமாக இரத்தினபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை நிலைகொள்ளும் நிலையில், மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் 75 மி.மீ.க்கு மேற்பட்ட பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இலங்கையின் வடக்கு, வடமத்திய, திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டல திணைக்களம் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.