அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், அவர்களைக் கண்காணிப்பதை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த முடிவு இலங்கை மற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் கிரீன் கார்ட் லாட்டரி மூலம் பலர் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்கா சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தடையும் விதிக்கப்பட்டுள்ளது.