ஐரோப்பாவெங்கும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்சில் இரு குழந்தைகள் காரினுள் விடப்பட்டமையால் உயிரிழந்தமை உட்பட, இதுவரை குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
பசிபிக் கடல் வெப்பநிலை உயர்வால் எல்-நினோ நிலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வெப்ப அலை, வறட்சி, வெள்ளம் மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
நாளைய தினம் வெப்பநிலை அபாயகரமான அளவில் உயரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.