எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடும் மழை மற்றும் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டு, பெரு நாட்டின் 40% மாவட்டங்களில் அரசு 60 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
பசிபிக் கடல் வெப்பநிலை உயர்வால் எல்-நினோ நிலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வெப்ப அலை, வறட்சி, வெள்ளம் மற்றும் கடுமையான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.