சமூக ஊடகங்கள், இணையதளங்கள் அல்லது நண்பர்கள் மூலம் பரவும் "குறைந்த காலத்தில் அதிக லாபம்", "உறுப்பினர்களை இணைத்தால் கூடுதல் வருமானம்" போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த மோசடி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், ஒரு போலி கையடக்க செயலி (Mobile App) மூலமாகவே பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.