புதிய திட்டத்தின் கீழ், கூடுதலாக வைத்திருக்கும், தேவையற்ற, புதிதாகத் தடை செய்யப்பட்ட அல்லது சட்டவிரோத துப்பாக்கிகளை மக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
யூத சமூகத்தின் கொண்டாட்ட நிகழ்வொன்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. இச்சம்பவத்தில் 29க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.