கடன்களை இலங்கை ரூபாயில் திருப்பிச் செலுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டு வேலை முடிந்தவுடன் இலங்கைக்கு திரும்பிய பிறகு இலங்கை ரூபாய் பெறுமதியில் கடனைத் தீர்க்க முடியும்,
“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடைய கனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் அத்தனையும் அம்மண்ணில் கால் வைத்து இரண்டொரு மாதங்களில் வெடித்துச் சிதறி, இன்று என் குடும்பத்துக்கு சுமையாய் வாழ்ந்து வருகிறேன்”.