இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உட்பட 7 மாவட்டங்களில் 50 மிமீக்கும் அதிக மழை பெய்யும். பலத்த காற்று, மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.