கத்தாரில் ஒரு ஈரானிய ட்ரோனை பிரித்தானிய டைபூன் (Typhoon) போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்க-ஈரான் மோதல் தொடங்கிய பிறகு பிரித்தானிய போர் விமானம் ஒன்று ஈரானிய ட்ரோனை வீழ்த்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
கியேவிலும் ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களின் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.