'ஏக்கிய ராஜ்ய' அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதை நிறுத்துவதற்கும், தமிழ் மக்கள் விரும்பும் தாயம், தேசியம், சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வை சாத்தியமாக்குவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியாவால் அழுத்தம் பிரயோகிக்க முடியும் என்று தமிழ்த் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
வட,கிழக்கைப் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான சந்திப்பு 19-04-2026 அன்று தாஜ் சமுத்திரா விடுதியில் நேற்றையதினம் நடைபெற்றிருந்தது.
மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார வெளிப்படுத்தினார் என்று இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களிடத்தில் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடினார்.
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்தியாவின் உப ஜனாதிபதி ஸ்ரீ சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை 19-04-2026 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.