இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், “ஓட்டோ இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே ஓட்டோ வாங்கி வீதிகளில் இயக்கும் நிலை இருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் தெல்கொடவைச் சேர்ந்த 69 வயதுடைய நபர் (ஓட்டோ சாரதி) என்றும், சியம்பலாபேயைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 7 வயதுடைய மகள் என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இரண்டு முச்சக்கரவண்டிகளில் குழந்தையின் தாய் உட்பட இரு குடும்பங்கள் நீர்கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.