அண்மையில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் மூன்று இலங்கை பிரஜைகளும் அடங்குவர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் உள்ளனர் என இலங்கை தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்க மேற்காசியாவிற்கு மேலும் 10,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.