இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, தனது சொத்துகள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (13) காலை இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவத்தில் பொறுப்பை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எம்பிக்கள் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இன்று உயர்மட்ட குழுவுடன் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரது விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.