சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிணையில் விடுவிக்கப்பட்ட பிரதிவாதிகளான யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானனர்.