அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் நடைபெற உள்ள இந்த மிகப்பெரிய தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு பிரபலமாகாத நபர்களே இருக்கிறார்கள். இதற்கு முன்னணி வீரர்களாக இருப்பவர்கள் தேர்வுக் குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்காததே காரணமாக உள்ளது.
இந்தியத் தேர்வுக் குழுவுக்கு புதிய தேர்வாளரை பிசிசிஐ தேடிக் கொண்டிருக்கிறது. முன்னாள் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா 2023 பிப்ரவரியில் ஒரு ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு தனது பதவியை இழந்தார்.