ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து வலுவான எதிர்க்கட்சியை உருவாக்குவது காலத்தின் தேவை என ஐ.தே.க தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.