இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, மலையகத் தமிழ் சமூகத்தின் நிலம், இருப்பிடம் மற்றும் ஏனைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இரண்டாவது நாள் கண்காட்சியில், வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளரும், ஊடகவியலாளருமான ஸ்ரீதரன் சோமீதரனால் உருவாக்கப்பட்ட ‘தாய்நிலம்’ ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.