தெஹிவளையில் தயாரிக்கப்பட்டு 'மேட் இன் சைனா' என போலியாக லேபிளிடப்பட்ட சுமார் 1,000 சோடி பாதணிகளை நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் நுகர்வோரை ஏமாற்றும் நோக்கில் பிரபல ஆடை விற்பனை நிலையத்திற்கு இவை விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.