ஜூலை முதல் செப்டம்பர் வரை எல் நினோ காலநிலை நிகழ்வு தீவிரமடையலாம் என உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இலங்கையில் வெப்பநிலை உயர்வு, வறட்சி, விவசாய பாதிப்பு மற்றும் நீர்மின் உற்பத்தி குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
2026 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய El Niño காலநிலை நிகழ்வு குறித்து உலக விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் காரணமாக உலகின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி, வெள்ளப்பெருக்கு, உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.