எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
வற் திருத்தம் காரணமாக பஸ் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருள் விலை திருத்தம் போன்று மாதாந்தம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
6.42 வீத அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் அது தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கமைய குறைந்த பட்ச பஸ் பயணக் கட்டணம் 27 ரூபாயாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.