சென்னையில் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் விலை இன்று (மார்ச் 7) மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர் விலை குறைவுக்குப் பிறகு 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலக சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ரூ. 9,000 வரை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை தினந்தோறும் மாறுபடும், மேலும் பல பொருளாதார காரணிகள், சர்வதேச சந்தை நிலவரங்கள், மற்றும் நாணய மாற்று விகிதங்கள் ஆகியவை இதை பாதிக்கின்றன.