இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் மீண்டும் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2013ஆம் ஆண்டுக்கு பின் கைக்கு எட்டாத ஐசிசி கோப்பைகள் உள்ளிட்ட பல காரணங்களால் அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.