பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சமூக வலைத்தளங்கள் வாயிலாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் எனவும், அவரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.