இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு அலகு ஜூன் 15 முதல் நாடளாவிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை அறிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். குறிப்பாக, மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.