இலங்கையில் 2026-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரையிலான தரவுகளின்படி, 91,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். குறிப்பாக, மொத்த நோயாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.