இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை. எனினும், கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் இரண்டு ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிநாட்டில் வசித்து வரும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரின் நெருங்கிய தொடர்பாளராக அவர் இருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.