அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிகளை செல்லாது என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, உலக வர்த்தக அரங்கில் புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இந்தத் தீர்ப்பை "மோசமானது" என்று குறிப்பிட்ட டிரம்ப், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்த நீதிபதிகளை "முட்டாள்கள்" என்றும் "தேசப்பக்தி இல்லாதவர்கள்" என்றும் விமர்சித்தார்.