செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இடம்பெற்றுள்ள 101 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட நிபுணர்கள் குழுவினர் மற்றும் பணியாளர்கள் உடல், உள ரீதியாகச் சோர்வடைந்த நிலையிலேயே சிறிய இடைவேளை வழங்கப்பட்டு மீண்டும் அகழ்வுப் பணிகள் இந்த மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.