இதனுடன், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் காலி மாவட்டம், மாத்தறை மாவட்டம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
"டித்வா" சூறாவளியின் கனமழையால் பெரும்பாலான முக்கிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றன.
வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.