மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கிகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் இந்திய பிரதிநிதி பங்கேற்பதற்கான அழைப்பும் ஜீவன் தொண்டமானால் கையளிக்கப்படவுள்ளது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் வரலாற்றில் முதன் முறையாகவே மலையக கலை, இலக்கியம் தொடர்பிலான பதிவு இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளது.