கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஹக்கீம், எதிர்காலத்தில் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
கண்டி திகன பகுதியில் 2018 மார்ச் 7 ஆம் திகதி இடம்பெற்ற திகன கலவரத்தில் தனது மகனான சம்சுதீன் அப்துல் வாசித் என்பவரை இழந்த தந்தையே றகீம் சம்சுதீன். சம்சுதீனின் மகன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு இவ் ஆண்டுடன் நான்கு வருடங்கள் உருண்டோடிவிட்டன.