இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் தீவிர தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக இன்று (6) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கையின் சில பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.