நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளால் விவசாயச் செய்கையில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்தை மாத்திரமே நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்லும் அவர்கள், மாற்றுத் தொழிலாக எந்தவொரு தொழிலையும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.