இலங்கையில் இன்று முதல் புதிய ஆசனப்பட்டி சட்டம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளும், சாதாரண வீதிகளில் சாரதி மற்றும் முன் இருக்கை பயணிகள் கட்டாயம் ஆசனப்பட்டி அணிய வேண்டும்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.