மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசலாம்.