இவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டதையடுத்து காலியில் உள்ள கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்களில் 22 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு கொக்கல விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் 180 பேர் பயணம் செய்திருந்தனர். அவர்கள் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு மற்றும் இராணுவ பயிற்சிகளில் பங்கேற்ற பிறகு ஈரானுக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.