2026 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் ஜூலை 23 வரை ஒன்லைனில் ஏற்கப்படுகின்றன.
இன்று முதல் அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான புதிய கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.